Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

கஷ்டங்கள் எல்லாம் காலாவதியாகிவிடும்

கஷ்டங்கள் எல்லாம் காலாவதியாகிவிடும்

கஷ்டங்கள் வரும்போது நாம் அப்படியே உடைந்துபோய்விடுகிறோம். அதுவும் அந்தக் கஷ்டங்கள் நீடித்துக்கொண்டே போனால் சொல்லவே வேண்டாம்! தாவீதை சவுல் ராஜா படாத பாடு படுத்தினார். ஆனாலும், அவர் கொடுத்த கஷ்டங்கள் எல்லாம் ஒருநாள் முடிவுக்கு வரும் என்பது தாவீதுக்குத் தெரிந்திருந்தது. அதோடு, யெகோவா சொன்ன மாதிரியே தன்னால் சிம்மாசனத்தில் உட்கார முடியும் என்பதும் அவருக்குத் தெரிந்திருந்தது. (1சா 16:13) விசுவாசம் இருந்ததால் தாவீதுக்கு பொறுமையோடு இருந்தார். தன்னுடைய சூழ்நிலையை யெகோவா மாற்றும்வரை காத்திருந்தார்.

நமக்குக் கஷ்டங்கள் வரும்போது, பைபிளிலிருந்து கற்றுக்கொண்ட விஷயங்களின்படி அவற்றைச் சமாளிப்பதற்கு நாம் முயற்சி செய்யலாம். சாமர்த்தியமாக நடந்து, நமக்குக் கிடைத்த அறிவையும் யோசிக்கும் திறனையும் பயன்படுத்தி நம்முடைய சூழ்நிலையை மாற்ற நாம் நினைக்கலாம். (1சா 21:12-14; நீதி 1:4) ஆனாலும், சில கஷ்டங்கள் தீராமல் இருக்கலாம். அப்படிப்பட்ட சமயங்களில் நாம் பொறுமையாக இருக்க வேண்டும், யெகோவாவுக்காக காத்திருக்க வேண்டும். சீக்கிரத்தில் நம்முடைய கஷ்டங்களை எல்லாம் நீக்கி, நம்முடைய ‘கண்ணீரையெல்லாம் அவர் துடைத்துவிடுவார்.’ (வெளி 21:4) யெகோவா தலையிட்டு நம்முடைய கஷ்டத்தைத் தீர்த்தாலும் சரி, வேறு எப்படியாவது அது தீர்ந்தாலும் சரி, ஒன்று மட்டும் உறுதி. நம்முடைய கஷ்டங்கள் எல்லாம் காலாவதியாகிவிடும்! இதைக் கேட்கும்போது நம் மனதுக்கு எவ்வளவு ஆறுதலாக இருக்கிறது!

வேற்றுமையில் ஒற்றுமை என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:

  • அமெரிக்காவின் தெற்குப் பகுதியில் இருக்கிற சகோதர சகோதரிகள் சிலருக்கு என்ன கஷ்டங்கள் வந்தன?

  • அவர்கள் எப்படிப் பொறுமையாகவும் அன்பாகவும் நடந்துகொண்டார்கள்?

  • ‘மிக முக்கியமான காரியங்களுக்கு’ அவர்கள் எப்படித் தொடர்ந்து முதலிடம் கொடுத்தார்கள்?—பிலி 1:10