Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிளில் இருக்கும் புதையல்கள் | 1 கொரிந்தியர் 1-3

நீங்கள் உலகச் சிந்தையுள்ள மனிதரா ஆன்மீகச் சிந்தையுள்ள மனிதரா?

நீங்கள் உலகச் சிந்தையுள்ள மனிதரா ஆன்மீகச் சிந்தையுள்ள மனிதரா?

2:14-16

நாம் ஒவ்வொருவரும் யெகோவாவோடு ஒரு நல்ல பந்தத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். ஆன்மீகச் சிந்தையுள்ள நபர்களாக, நாம் தொடர்ந்து முன்னேறிக்கொண்டே இருக்க வேண்டும். (எபே 4:23, 24) அப்படி முன்னேற, நீங்கள் ஆன்மீக உணவை எடுத்துக்கொள்ள வேண்டும், ஆன்மீக இலக்குகளை வைக்க வேண்டும், கடவுளுடைய சக்தியால் உண்டாகிற குணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

ஒரு வருஷத்துக்கு முன்பு... பத்து வருஷங்களுக்கு முன்பு... அல்லது ஞானஸ்நானம் எடுத்த சமயத்தில்... யெகோவாவோடு உங்களுக்கு இருந்த பந்தம் எப்படி இருந்தது? இப்போது எப்படி இருக்கிறது?