Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிளில் இருக்கும் புதையல்கள்

“அந்தத் தேசத்து ஜனங்கள் எல்லாரையும் நீங்கள் துரத்தியடிக்க வேண்டும்”

“அந்தத் தேசத்து ஜனங்கள் எல்லாரையும் நீங்கள் துரத்தியடிக்க வேண்டும்”

தங்களைப் பாவம் செய்ய வைக்கும் எந்தவொரு விஷயத்தையும் தேசத்திலிருந்து ஒழித்துக்கட்ட வேண்டும் என்று தன்னுடைய மக்களுக்கு யெகோவா கட்டளை கொடுத்தார் (எண் 33:52; w10-E 8/1 பக். 23)

தேசத்தை முழுமையாக தங்களுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கு அவர்கள் எடுக்கிற எல்லா முயற்சிகளையும் ஆசீர்வதிப்பதாக யெகோவா சொன்னார் (எண் 33:53)

தங்களுடைய எதிரிகளை முற்றிலுமாக துரத்தியடிக்கவில்லை என்றால் அவர்கள் நிறைய பிரச்சினைகளைச் சந்திப்பார்கள் என்றும் சொன்னார் (எண் 33:55, 56; w08 2/15 பக். 27 பாரா. 5-6; it-1-E பக். 404 பாரா 2)

யெகோவாவைப் பிரியப்படுத்த வேண்டுமென்றால், ஒழுக்கம் சம்பந்தமாக அவர் கொடுத்திருக்கிற சட்டங்களுக்கு எதிரான அல்லது அவரோடு இருக்கிற பந்தத்தைப் பாதிக்கிற எந்தவொரு பழக்கவழக்கத்தையும் நாம் ஒழித்துக்கட்ட வேண்டும். (யாக் 1:21) பாவம் செய்வதற்கான தூண்டுதல், நமக்குள் இருந்தாலும் சரி, இந்த உலகத்திலிருந்து வந்தாலும் சரி, அதை எதிர்த்துப் போராட யெகோவா நமக்குப் பலம் தருகிறார்.