Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

விசுவாசதுரோகிகள்—ஜாக்கிரதை!

விசுவாசதுரோகிகள்—ஜாக்கிரதை!

நம்முடைய விசுவாசத்தை கெடுத்துப்போடுவதற்கு சாத்தானும் அவனுடைய கட்டுப்பாட்டில் இருக்கிற ஆட்களும் உண்மைகளை பொய்களோடு கலந்து சொல்கிறார்கள். (2கொ 11:3) உதாரணத்துக்கு, அசீரியர்கள் பாதி உண்மைகளையும் அப்பட்டமான பொய்களையும் சொல்லி யெகோவாவின் மக்களை சோர்ந்துபோக வைத்தார்கள். (2நா 32:10-15) இன்றைக்கும் விசுவாசதுரோகிகள் அதையேதான் செய்கிறார்கள். விசுவாசதுரோக கருத்துக்கள் நம் கண்ணிலோ காதிலோ விழுந்தால் நாம் என்ன செய்ய வேண்டும்? பொதுவாக, ஒரு விஷத்தை எப்படி பார்ப்போமோ அதேமாதிரி அதையும் பார்க்க வேண்டும். அதை படிக்காதீர்கள்! அதற்கு பதில் சொல்லாதீர்கள், பரப்பவும் செய்யாதீர்கள்! யெகோவாமேலும் அவருடைய அமைப்புமேலும் சந்தேகத்தை விதைக்கிற மாதிரி ஏதாவது தகவல்களை நீங்கள் பார்த்தால், உடனே அது விஷம் என்று புரிந்துகொண்டு அதை ஒதுக்கித்தள்ளுங்கள்.—யூ 3, 4.

‘விசுவாசத்துக்காகக் கடினமாய்ப் போராடுங்கள்’!—சில பகுதிகள் என்று வீடியோவை பார்த்துவிட்டு, இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:

  • இன்டெர்நெட்டில் மக்கள் சொல்லும் கருத்துக்களையும் கமெண்ட்டுகளையும் பார்க்கும்போது நாம் ஏன் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்?

  • ரோமர் 16:17-ல் இருக்கிற ஆலோசனையை நாம் எப்படி பின்பற்றலாம்?