Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிளில் இருக்கும் புதையல்கள்

“யெகோவாவினால் அதைவிட அதிகமாக உங்களுக்குக் கொடுக்க முடியும்”

“யெகோவாவினால் அதைவிட அதிகமாக உங்களுக்குக் கொடுக்க முடியும்”

கடவுளுடைய எதிரிகளை எதிர்த்து போர் செய்ய அமத்சியா கூலி கொடுத்து வீரர்களை வரவழைத்தார் (2நா 25:5, 6)

கூலிக்கு வந்த வீரர்களை அனுப்பிவிடச் சொல்லி கடவுளுடைய ஊழியர் ஒருவர் அமத்சியாவிடம் சொன்னார் (2நா 25:7, 8; it-1-E பக். 1266 பாரா 6)

வீரர்களை அனுப்பிவிட்டதால் அமத்சியாவுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை யெகோவாவால் ஈடுகட்ட முடியும்; சொல்லப்போனால், பலமடங்கு அதிகமாக கொடுக்க முடியும் (2நா 25:9, 10)

உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘யெகோவாவுக்கு முழுமையாக சேவை செய்ய நான் என்னென்ன தியாகங்களைச் செய்யலாம்? அப்படிச் செய்தால் எனக்கு என்னென்ன ஆசீர்வாதங்கள் கிடைக்கும்?’—மல் 3:10; w21.08 பக். 30 பாரா 16.